3
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

Share

சட்டவிரோத ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிப்பு: விசாரணையில் வெளியான பின்னணி

கொழும்பு – பொல்காசோவிட பிரதேசத்தில் கார் பழுதுபார்க்கும் இடமொன்றில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட லேண்ட் ரோவர் ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன பழுதுபார்க்கும் இடத்தின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மஹரகம பிரதேச விகாரை விஹாராபதி ஒருவர் இந்த வாகனத்தின் உதிரிப்பாகங்களை வழங்கி சென்றதாக கூறியுள்ளார்.

அத்தோடு, வாகனத்தை திருத்துவதற்கான தேவையான உதிரிபாகங்களை உரிமையாளர் என கூறப்படும் விஹாராபதி அவ்வப்போது வந்து வழங்கி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வாகனத்தை வழங்கியதாக கூறப்படும் விகாரை விஹாராபதியிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ​​குறித்த ஜீப் மேலதிக விசாரணைகளுக்காக கெஸ்பேவ காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...