tamilnaadi 86 scaled
இலங்கைசெய்திகள்

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

Share

அவசரமாக கூடும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்தில் இன்று கூடுகின்றது.

மத்திய குழுக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவெடுக்கப்பட்டு, நேற்று இரவிரவாக மத்திய குழுவில் அங்கம் வகிப்போருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு திருகோணமலையில் இன்று (27.1.2024) கூட்டம் இடம்பெறுகின்றது.

தமிழரசுக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்றும் நடைபெறவுள்ளது.

நாளை கட்சியின் தேசிய மாநாடும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்தநிலையில் கடந்த 21 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் இடம்பெற்றது.

321 பேர் வாக்களித்திருந்தனர். இதில் சிவஞானம் சிறீதரன் 184 வாக்குகளையும், எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

47 மேலதிக வாக்குகளால் சிறீதரன் வெற்றிபெற்று, தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் பொதுக் குழுக் கூட்டத்துக்கு முன்பாக மத்திய குழுக் கூட்டம் நடைபெறுகின்றமை பரபரப்பாகியுள்ளது.

மத்திய குழு உறுப்பினர்களுக்கு மிகக் குறுகிய கால அவகாசத்தில் நேற்று இரவிரவாக அழைப்பு விடுக்கப்பட்டு இந்தக் கூட்டம் கூடப்படுகின்றமை பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Share
தொடர்புடையது
14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மரண தண்டனை அமுலாகுமா? – அமைச்சரவை இன்னும் தீர்மானிக்கவில்லை என நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

இலங்கையில் தூக்குத் தண்டனை உள்ளிட்ட மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித...

13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கச்சதீவு திருவிழா பிப்ரவரி 27-இல் கொடியேற்றம்! – 8,000 பக்தர்கள் பங்கேற்க விரிவான ஏற்பாடு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்த...

12
செய்திகள்அரசியல்இலங்கை

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் நிகழ்வுகள் ரத்து: ஜனநாயகம் அடக்கப்பட்டுவிட்டது – அலி சப்ரி கடும் விசனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union)...

11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அகுரேகோடா இரட்டைக் கொலை: 80% விசாரணை நிறைவு – 12 தனிப்படைகள் மூலம் தேடுதல் தீவிரம்!

அகுரேகோடா (Akuregoda) பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி...