tamilnaadih 3 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை கடற்படையின் கடமை பொதுமக்களை பாதுகாப்பதா..! தமிழர் பகுதி கடத்தலுக்கு உதவுவதா..!

Share

இலங்கை கடற்படையின் கடமை பொதுமக்களை பாதுகாப்பதா..! தமிழர் பகுதி கடத்தலுக்கு உதவுவதா..!

இலங்கை கடற்படையின் கடமை என்பது பொதுமக்களை பாதுகாப்பதா? அல்லது அவர்களின் காணிகளை அபகரிப்பதா? என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி யாழ் மாவட்ட செயலாளர் கருணாகரன் குணாளன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“யாழ் பொன்னாலையில் ஆயுதம் தரித்த கடற்படையினரின் முன்பாகவே வன்முறைக் கும்பலொன்றினால் தமிழ் இளைஞனொருவர் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளமையானது தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா பாதுகாப்பு படைகளின் மீதான சந்தேகத்தினை மென்மேலும் வலுவடையச்செய்துள்ளது .

மேற்படி கடத்தலில் குறித்த முகாமிலுள்ள கடற்படையினருக்கும் தொடர்பிருப்பதாகவே ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில் இதேநிலை தென்னிலங்கையில் ஒரு சிங்கள இளைஞனுக்கு நடைபெற்றிருந்தால் அந்த கடற்படை முகாம் தீயிட்டு கொழுத்தப்பட்டிருக்கக்கூடும்.

ஆனால் தமிழர் தாயகத்தில் அவ்வாறு கடற்படை முகாம் மீது கைவைத்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைக்குள் தள்ளும் ஜனநாயகமே இலங்கையில் காணப்படுகின்றது.

கண்முன்னே ஒரு பொதுமகனை காப்பாற்றமுடியாத லட்சக்கணக்கான சிறீலங்கா பாதுகாப்பு படைகள் தமிழர் தாயகத்தில் ஏன் முகாம்களை அமைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தினை அழிக்கிறார்களென்று பாமரமக்களும் கேள்வியெழுப்புகின்ற சூழ்நிலையினையே பொன்னாலை கடத்தல் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞனை கடமையிலிருந்த கடற்படையினரால் வன்முறைக் கும்பலை கட்டுப்படுத்தி காப்பாற்றமுடியாமல் போனதாக கடற்படையின் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய கூறியிருப்பது வேடிக்கையாக அமைந்திருப்பதாகவே கருதவேண்டியிருக்கின்றது.

ஏனெனில் உலகின் பலம்வாய்ந்த ஆயுதப் போராட்ட இயக்கமாக விளங்கிய விடுதலைப்புலிகளை அழித்ததாக கூறுகின்ற சிறீலங்கா பாதுகாப்பு படையினரால் சாதாரண வன்முறைக்கும்பலிடமிருந்து ஒரு இளைஞனை மீட்கமுடியவில்லையென்று கூறுவது நகைச்சுவையான கேலிக்கூத்து.

இவ்வாறான பயனற்ற கடற்படையினர் தமது தேவைகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து முகாம்களை அமைக்கின்றார்கள்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக விளங்கிய காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் ஆவா என்கிற வன்முறை கும்பலை உருவாக்குவதில் அப்போதைய யாழ். மாவட்ட இராணுவ தளபதி பெரும்பங்கினை வகித்திருந்ததாக கூறப்படுவது உண்மையாகவே இருக்கக்கூடுமென்று எண்ணத் தோன்றுகின்றது.

இதே இலங்கை கடற்படை கடந்த காலங்களில் ஈபிடிபி போன்ற அரச ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட கடத்தல்கள், படுகொலைகளுக்கும் ஆதரவாக செயற்பட்டிருக்ககூடும் என்பதும் நினைவுக்கு வருகின்றது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...