20 8
இலங்கைசெய்திகள்

யாழ். சாவகச்சேரியில் எம்.பியால் பிடிக்கப்பட்ட பாரவூர்தி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Share

யாழ். சாவகச்சேரியில் எம்.பியால் பிடிக்கப்பட்ட பாரவூர்தி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கடந்த 2ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனினால் வழிமறிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட  சுண்ணக்கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தினால் இன்று(07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாரவூர்தியின் சாரதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குருபரனினால், சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகவே குறித்த சுண்ணக்கல் ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விவகாரம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் சட்டத்தரணி குருபரனினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரவூர்தி மற்றும் சுண்ணக்கற்களை விடுவித்த நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....