tamilni 16 scaled
இலங்கைசெய்திகள்

சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பணவீக்கம் உயரும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பணவீக்கம் உயரும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசாங்க ஊழியர்கள் கோருவது போன்று சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பாரியளவு பணவீக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரித்தால் அவ்வாறு வழங்கப்படும் தொகைக்காக பணத்தை அச்சிட நேரிடும் என தொழிற்சங்கங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பணம் அச்சிட்டால் மீண்டும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும்,இதனால் சம்பளங்களை அதிகரிப்பதில் எவ்வித பலனும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்தை அச்சிட்டு சம்பளங்களை அதிகரிக்க வேண்டுமாயின் அதனை தொழிற்சங்கங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....