5 44
இலங்கைசெய்திகள்

ரணில் தோற்றால் நாட்டை விட்டே வெளியேறப்போகும் மக்கள் : அச்சமூட்டுகிறார் ராஜித

Share

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தோல்வியடைந்தால் பலர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(rajitha senaratne) தெரிவித்துள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்க என்ற நபருக்காக அல்ல, நாட்டுக்காகவே மக்கள் இம்முறை வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தன்னிடம் திறமை இருப்பதாகவும், வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்க விரும்பவில்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த முறை மொட்டு எம்பிக்களின் வீடுகள் எரிக்கப்பட்டமை போன்று எதிர்காலத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினால் இம்முறை மற்றவர்களின் வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அதனை வழங்கக் கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...