11 6
இலங்கைசெய்திகள்

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

Share

பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒப்புதல்

காடுகளுக்குள் நுழைய பழங்குடியின மக்களுக்கு அடையாள அட்டை வழங்க வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் முடிவு செய்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் நுழையும் போது வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக ரதுகல பழங்குடியின தலைவர் டானிகல மஹாபந்தலகே சுடவன்னில தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு காரணமாக பழங்குடியின மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதற்கு சட்டப்பூர்வ அடையாள அட்டை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக ரதுகல மற்றும் தம்பன பழங்குடியினருக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும், பழங்குடியின தலைவர்கள் வழங்கும் பட்டியலின் பிரகாரம் அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...