keheliya rambukwella
அரசியல்இலங்கைசெய்திகள்

மருந்துத் தட்டுப்பாட்டிற்கு தீர்வின்றேல் பதவி விலகுவேன் : அமைச்சர் கெஹலிய!

Share

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை சரி செய்ய நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் முறையான தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலகப் போவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நாட்டில் மருந்து பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மருந்து பொருட்கள் கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக 9 மாதமளவில் பெறுகை கோரல் தொடர்பில் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

அதனை குறைத்துக்கொள்ள அமைச்சரவைக்கும் பல சந்தர்ப்பங்களில் சென்றோம். அமைச்சரவையும் அதற்கு அனுமதி வழங்கி இருந்தது.

அதற்கிடையில் ஒருசில குழுவினர் இவ்வாறு மருந்து பொருட்கள் கொண்டுவருவதை நிறுத்துமாறு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதனால் எமக்கு பாதிப்பு ஏற்பட்டது.

சுகாதாரத்துறை தொடர்பாக நீதிமன்றத்தின் சில தீர்ப்பு எமக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. இது தொடர்பாக நீதி அமைச்சருக்கும் எமது கவலையை தெரிவித்திருக்கிறோம். மருந்து தட்டுப்பாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

அடுத்த விடயம் நிதி தொடர்பாகவும் எமக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சுகாதார துறைக்கு போதுமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கிறோம்.

அதனால் இதுதொடர்பாக இன்று பதில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இருக்கிறது. கலந்துரையாடலில் எமக்கு சரியான முடிவு கிடைக்காவிட்டால் அது தொடர்பாக இந்த சபைக்கு அறிவிப்பேன்.

அத்துடன் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில், நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது அதற்கு பதில் சொல்லவேண்டும்.

அதனால் நிதி அமைச்சில் இடம்பெற்றும் கலந்துரையாடலின் மூலம் மருந்துபொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டை சரி செய்துகொள்ள முடியாமல் போனால் தொடர்ந்தும் இந்த பதவியில் இருப்பதற்கு எதிர்பார்க்க மாட்டேன்.

ஏனெனில் இது சமுதாயத்திற்கும் இந்த சேவைக்கும் ஒரு பெரிய குறைபாடு. காரணங்கள் எதுவாக இருந்தாலும், அந்த குறைபாடுகளுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...