5 43
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலுடன் இணைகின்றாரா ஹிருணிகா!

Share

ரணிலுடன் இணைகின்றாரா ஹிருணிகா!

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொலைபேசி மூலம் ஹிருணிகா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் விரைவில் அவர் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவார் எனவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் தாம் ஒருபோதும் ரணிலுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

கொள்கை ரீதியான அரசியலில் ஈடுபடும் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் சஜித் பிரேமதாசவை விட்டு வேறு ஒருவருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் முகத்தைக்கூட தாம் பார்க்க விரும்புவதில்லை எனவும் அதனால் அவர் செல்லும் நிகழ்வுகளைக் கூட தாம் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சஜித்தின் மனைவி ஜலனி பிரேமதாச ரணிலுக்கு ஆதரவளித்தாலும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஹிருணிகா கூறியதாக பிரபல ஊடகவியலாளரொருவர் குறித்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...