7 16
அரசியல்இலங்கைசெய்திகள்

அநுர பதிலளிக்கும் வரை பேரணிகளில் கேள்வி எழுப்புவேன் : ரணில் தெரிவிப்பு

Share

அநுர பதிலளிக்கும் வரை பேரணிகளில் கேள்வி எழுப்புவேன் : ரணில் தெரிவிப்பு

அநுரகுமார திசாநாயக்க பதிலளிக்கும் வரை, அனைத்து பேரணிகளிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“வடக்கில் உள்ள மக்களை அச்சுறுத்தியதற்காக மன்னிப்பு கேட்பீர்களா என்று நான் அநுரவிடம் கேள்வி எழுப்பினேன். யாழ்ப்பாணத்தில் நான் கூறிய எனது இந்தக் கருத்துக்கு அவர் பதிலளித்ததாகக் கேள்விப்பட்டேன்” என்று வெலிமடையில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுமதி செயலாக்க வலயங்களை அமைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்று சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அநுரவின் விஞ்ஞாபனம் இலங்கை ஏற்கனவே செய்துள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரத்து செய்யும் என்று கூறுகிறது.

இந்தநிலையில், தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் இல்லாமல் நீங்கள் எவ்வாறு ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்ய முடியும்? இந்தக் கேள்விக்கு அநுர பதிலளிக்க வேண்டும். அவர் எனக்குப் பதிலளிக்கும் வரை இந்தக் கேள்விகளை அனைத்து பேரணிகளிலும் எழுப்புவேன் என்று ரணில் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...