25 684703d9b6f1e
இலங்கைசெய்திகள்

கொள்கலன் விடுவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் துப்பாக்கிச் சூடுகள் அதகிரிப்பு – உதய கம்மன்பில

Share

அண்மையில் பரிசோதனை இன்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகளிவல் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த கொள்கலன்கள் தொடர்பான விபரங்கள் தம்மிடம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்கலன்களை அனுப்பியது யார், எந்த நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது, இந்த கொள்கலன்களில் காணப்பட்ட பொருட்கள் என்ன என்பது பற்றிய பல்வேறு விடயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் 270 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக கூறினாலும், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.

இந்த கொள்கலன்களை பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் அனுப்பியவர்கள் இதற்கு முன்னர் இறக்குமதிகளின் போது தவறிழைத்தவர்களா என கேள்வி எழுப்பி தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தமக்கு பதில் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கலன் குறித்து ஆய்வு செய்த குழுவின் தலைவரும், சுங்கத் திணைகள மேலதிக பணிப்பாளருமான சீவலி அருகொட நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதாகவும் அவர் பெல்ஜியத்தில் ஒர் தொழிலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடியைப் போன்று தொடர்புடையவர்கள் வெளிநாடு சென்றால் அவர்களை சட்டத்தின் முனு; நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

சுங்க சட்டங்களை மீறி அமைச்சர் செயற்பட்டு உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் துறைமுகத்திலிருந்து சிகப்பு லேபல் இடப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் அண்மைய நாட்களாக பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த கொள்கலன்கள் விடுவிப்பதற்கே துறைமுக அமைச்சருக்கும் சுங்கப் பிரிவு பொறுப்பான நிதி அமைச்சருக்கும் அதிகாரம் கிடையாது, இவ்வாறான ஓர் பின்னணியில் போக்குவரத்து அமைச்சர் இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு எவ்வாறு உத்தரவிட்டார் என உதயகம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் இந்த கொள்கலன் விடுவிப்பு தொடர்பிலான மூன்று மணித்தியாளங்கள் வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் பதினெட்டாம் திகதிகளில் சிகப்பு மற்றும் மஞ்சள் லேபல் இடப்பட்ட பெருந்தொகையான கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்த குறிப்பிட்ட கொள்கலன்களை விடுவிக்கும் நோக்கில் கடந்த டிசம்பர் மாதம் முதல் துறைமுகத்தில் கடுமையான கொள்கலன் நெரிசல் ஒன்றை செயற்கையாக ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கலன்களில் ஆயுதங்கள் இருக்கவில்லை என சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளரும், பாதுகாப்புச் செயலாளரும் எவ்வாறு கூறுகின்றார்கள் எனவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்ப்டாத கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அவர்கள் எவ்வாறு உறுதிப்படுத்துகின்றார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...