tamilni 31 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்

Share

வெளிநாட்டில் இருந்து வந்த கணவனின் வெறிச்செயல்

குருநாகல், வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார்.

இக்கொலை நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் குருநாகல், மரலுவாவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபர் 02 நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதாகவும், குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபரான கணவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் நீதிமன்றத்தால் சிறை அதிகாரியின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...