tamilnif 6 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு கணவன் கொடூரம்

Share

கொழும்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு கணவன் கொடூரம்

கொழும்பில் கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட கைது செய்யப்பட்ட கணவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது கொலை என சந்தேகிக்கப்படுவதாகவும் சட்ட வைத்திய மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரின் கணவர் மனைவியுடன் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி வருவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தை தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டு சந்தேகம் அடைந்த கணவர் மனைவியின் வயிற்றில் காலால் உடைத்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கவலைக்கிடமான நிலையில் இருந்த மனைவி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாத கரு கலைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...