tamilni 354 scaled
இலங்கைசெய்திகள்

மட்டகளப்பில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன்

Share

மட்டகளப்பில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன்

மட்டகளப்பு-வாழைச்சேனை ஓட்டுமாவடியில் தனது மனைவியின் கழுத்தையும் கையையும் வெட்டி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது 27.09.2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக குறித்த நபர் மனைவியின் கழுத்து மற்றும் கையை கூரிய ஆயுதத்தால் வெட்டியபோது அவர் பலத்தகாயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டு படுகாயமடைந்த பெண்னை காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மனைவியை வெட்டிய 57 வயதுடைய கணவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....