இலங்கைசெய்திகள்

மட்டகளப்பில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன்

tamilni 354 scaled
Share

மட்டகளப்பில் மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவன்

மட்டகளப்பு-வாழைச்சேனை ஓட்டுமாவடியில் தனது மனைவியின் கழுத்தையும் கையையும் வெட்டி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது 27.09.2023 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக குறித்த நபர் மனைவியின் கழுத்து மற்றும் கையை கூரிய ஆயுதத்தால் வெட்டியபோது அவர் பலத்தகாயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் குறித்த வீட்டை முற்றுகையிட்டு படுகாயமடைந்த பெண்னை காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து அவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மனைவியை வெட்டிய 57 வயதுடைய கணவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...