13 3
இலங்கைசெய்திகள்

தேர்தல் கால முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள விடயம்

Share

தேர்தல் கால முறைகேடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள விடயம்

ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறும் முறைகேடுகளை கண்காணிக்கவும் அது குறித்த தகவல்களை பெறுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, எந்தவொரு சார்பு அல்லது பாகுபாடும் அற்ற சட்டத்தின் சமமான பாதுகாப்பை, அனைவருக்கும் வழங்குவதற்கு இலங்கை பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தபட்டுள்ளது .
இதன்படி, தேர்தலுக்கு அமைவாக பொலிஸ் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளால் தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதாக மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், பொதுமக்கள், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 0767914696 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 0112505566 தொலைநகல் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், தமது தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
17487797691
சினிமாசெய்திகள்

அடையாளம் தெரியாமல் மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்..! வைரலாகும் ரீசெண்ட் க்ளிக்ஸ்..

தமிழ் சினிமாவில் இயல்பான நடிப்பின் ராணியாக திகழ்கின்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ‘காக்கா முட்டை’, ‘கனா’,...

death
சினிமாசெய்திகள்

தமிழர் பகுதியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகளுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு, குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் புகைப்படம் எடுக்க சென்ற இரு மாணவிகள் தவறி...

WhatsApp Image 2025 06 01 at 17.50.09 683c46fc6b9bd
சினிமாசெய்திகள்

வெற்றி எனக்கென நினைத்தது இல்லை….!மனம் திறந்த காயத்திரி மற்றும் நசரின்..!

விஜய் டிவியில் மிகவும் பிரபல்யமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...

maxresdefault 29 683c5da9b6598
இலங்கைசெய்திகள்

யூடியூபை அதிரவைக்கும் “விண்வெளி நாயகா..” பாடல்..! வெறித்தனமான அப்டேட்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த கனவு கூட்டணி ஒன்று 36 வருடங்களுக்குப் பிறகு...