24 664435918f7c6
இலங்கைசெய்திகள்

வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிக்குமாறு கோரிக்கை

Share

வெள்ளை வான் கடத்தல் குறித்து விசாரிக்குமாறு கோரிக்கை

இலங்கையில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.

சட்ட மா அதிபரிடம் இது தொடர்பிலான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரும் ஹொரவத்பொத்தான பகுதியைச் சேர்ந்த கபில குமார டி சில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கடத்தி இரகசியமாக இந்த நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி கபில குமார காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசேட அதிரடிப்படையினரே தமது மகனை அழைத்துச் சென்றனர் என கபிலவின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

பின்னர் மார்ச் 29ம் திகதி விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கபிலவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் ஏப்ரல் மாதம் 12ம் திகதி கபிலவை தாங்கள் தடுத்து வைக்கவில்லை என விசேட அதிரடிப்படையினர் அறிவித்தனர்.

எவ்வாறெனினும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி கபில பிட்டிகல பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயத்தை அறிந்து கொண்ட மனித உரிமை ஆணைக்குழு காலி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கபிலவை சந்தித்துள்ளனர்.

இதன் போது தம்மை பலவந்தமாக கடத்தியதாகவும் பொலிஸார் எனக் கூறிக்கொண்ட நபர்களே தம்மை கடத்தியதாகவும் வெள்ளை வானில் கடத்திச் சென்று தாக்கியதாகவும் கபில, மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரைியல் கபிலவை யார் தடுத்து வைத்திருந்தனர் என்பது குறித்து எந்தவொரு அரசாங்க நிறுவனமும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதனை தடுக்க வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழு சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் நபர் ஒர் கொலைக் குற்றச்செயல் சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...