11 17
இலங்கைசெய்திகள்

அதிரடியாக ரணில் வெளியிட்ட அறிவிப்பு: அரசாங்கத்திற்கு வழங்கிய பதில்

Share

அதிரடியாக ரணில் வெளியிட்ட அறிவிப்பு: அரசாங்கத்திற்கு வழங்கிய பதில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தனது ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து எவ்வாறு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்த உண்மைகளை விளக்கி இன்று (19) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள், தற்போதுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்கும் பணம் செலுத்தப்பட்டதாகவும், அதற்காக 1515 மில்லியன் ரூபாவும், 2023 இல் 839 மில்லியன் ரூபாவும், 2024 செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் நோயாளர்களுக்கான மருத்துவ உதவியாக சுமார் 450 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் பிரதிநிதிகள் தனிப்பட்ட ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், ஒரு கோரிக்கையை தவிர ஏனைய அனைத்து கோரிக்கைகளுக்கும் ஜனாதிபதி நிதியத்தின் பொது நடைமுறைகளை பின்பற்றி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் 7,000 மில்லியன் ரூபா பணம் பல்வேறு கொடுப்பனவுகளுக்கு மத்தியில் இருந்ததாகவும், ஆனால் 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி 11,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மீதியை பேணுவதற்கு அவர் உழைத்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 11 மாதங்களில் தனது பாதுகாப்புச் செலவுக்காக 82 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்திள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...