19 14
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி…! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Share

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி…! தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு, மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

தேர்தலில் தாம் விரும்பும் வேட்பாளர்களுக்கு புள்ளடியை இடமுடியும். அதேவேளை விருப்பு வாக்குகளையும் வழங்குவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தாம் விரும்பும் வேட்பாளருக்கு முதலாவது இலக்கத்தையும் விருப்பம் ஏற்படுமாயின் ஏனைய இரண்டாம், மூன்றாம் வேட்பாளர்களுக்கு உரிய இலக்கங்களை பதிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

புள்ளிடியோடு இலக்கங்களை பதிவு செய்தால் உரிய வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

1982ஆம் ஆண்டிலிருந்து இதுவரை காலமும் நடைபெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களிலும் விருப்பு வாக்குகளை எண்ணத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றது.

இரண்டாவது வாக்குகளில் எண்ணுவதற்கான தேவைகள் ஏற்படுமாயின் அதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...