10 40
இலங்கைசெய்திகள்

இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் தொடரும் : சூளுரைக்கும் ஹூதி

Share

இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் தொடரும் : சூளுரைக்கும் ஹூதி

யேமனில் (Yemen) இஸ்ரேலிய (Israel) தரப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள போதிலும் தங்களது பதில் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் (Gaza) இடம்பெற்ற இனப்படுகொலைக்குப் பதிலளிக்கும் வகையில் தங்களது தரப்பிலிருந்து தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சி படையின் அரசியல் தலைவரான மொஹமட் அல்-புகைதி தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேல் மீதான தங்களது இராணுவ இலக்குகளை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக யேமனின் தலைநகரான சனா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அங்குள்ள விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள் என்பவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதன்போது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஈரான் ஆதரவு குழுவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் தாம் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...