இலங்கைசெய்திகள்

இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் தொடரும் : சூளுரைக்கும் ஹூதி

Share
10 40
Share

இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் தொடரும் : சூளுரைக்கும் ஹூதி

யேமனில் (Yemen) இஸ்ரேலிய (Israel) தரப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள போதிலும் தங்களது பதில் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் (Gaza) இடம்பெற்ற இனப்படுகொலைக்குப் பதிலளிக்கும் வகையில் தங்களது தரப்பிலிருந்து தொடர்ந்தும் தாக்குதல் நடத்தப்படும் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சி படையின் அரசியல் தலைவரான மொஹமட் அல்-புகைதி தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேல் மீதான தங்களது இராணுவ இலக்குகளை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக யேமனின் தலைநகரான சனா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

அங்குள்ள விமான நிலையம், துறைமுகங்கள் மற்றும் மின்னுற்பத்தி நிலையங்கள் என்பவற்றை இலக்கு வைத்து இஸ்ரேல் இவ்வாறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதன்போது நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஈரான் ஆதரவு குழுவான ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் தாம் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள் காரணமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...