வீடு வாங்க காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி
இலங்கைசெய்திகள்

வீடு வாங்க காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி

Share

வீடு வாங்க காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தருவதாகவும், காணி வாங்கி தருவதாகவும் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடிக்கு தொடர்புடைய தனியார் நிறுவனத்தை நடத்தும் இடத்தை வாடிக்கையாளர்கள் குழு ஒன்றினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மிகவும் சலுகை விலையில் புதிய வீடு கட்டித் தருவதாகவும், புதிய காணி வாங்க வாய்ப்பு தருவதாகவும் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது.

இவ்வாறு விற்கப்படும் காணி மற்றும் வீடுகள் ஒரு கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் வரையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்திற்கு புதிய வீடு கட்டுவதற்கும் புதிய காணி வாங்குவதற்கும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முன்பணமாக 10, 20, 35, 48, 50 லட்சம் போன்ற வடிவங்களில் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் மீதித் தொகையை செலுத்தி உரிய பரிவர்த்தனையை நிறைவு செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்ததுடன், அதற்கமைய, எஞ்சிய பணம் அனைத்தும் கடந்த ஜூன் 22ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பத்து நாட்கள் கடந்தும் எதிர்பார்த்த காணியோ, வீடோ கிடைக்காததால் மாலம்பே பகுதியில் நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தின் முன் 50 வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர்.

அவர்கள் வந்த நேரத்தில், அலுவலகத்தில் அனைத்து பொருட்களையும் அகற்றியிருப்பதை அவதானித்தனர். இதுதவிர, இந்த கட்டடம் வாடகை அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்ற அறிவிப்பும், வாசலில் வைக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நிறுவனம் பல போலி பெயர்களில் இயங்கி வருவதும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பல பெயர்களில் செயற்பட்டமை தெரியவந்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....