15 25
இலங்கைசெய்திகள்

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

Share

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருந்துகளை நடத்த வசதிகளை வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதமொன்றினை தேர்தல் ஆணைக்குழு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அண்மைய நாட்களில் கண்டியில் வேட்பாளர்கள் பலர் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து விருந்துகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு முதலில் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பொழுதுபோக்கிற்காக தங்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு இவ்வாறு விருந்துகளை ஏற்பாடு செய்யும் வேட்பாளர்களை ஆதரிப்பதை தவிர்க்குமாறு ஹோட்டல் உரிமையாளர்களிடம் அந்த கடிதங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

மேலும் ஹோட்டல்களில் இதுபோன்ற விருந்துகளை நடத்துவதை நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் நேற்று (28) பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

 

இதற்கிடையில், வேட்பாளர்கள் பல்வேறு ஹோட்டல்களில் விருந்து வழங்குவதாக பொய் முறைப்பாடுகள் வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்றை நடாத்திக்கொண்டிருந்த போது, தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று அந்த இடத்தை சோதனையிட்ட போது, கண்டி மாவட்ட வேட்பாளர் ஒருவர் பின் வாசல் வழியாக தப்பி ஓடியதாக செய்திகள் வெளியாகியிருந்து.

 

இந்த வேட்பாளரின் செயற்பாடுகள் தொடர்பில் கண்டி மாவட்டத்தின் ஏனைய வேட்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...