15 25
இலங்கைசெய்திகள்

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

Share

ஹோட்டல் உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருந்துகளை நடத்த வசதிகளை வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதமொன்றினை தேர்தல் ஆணைக்குழு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அண்மைய நாட்களில் கண்டியில் வேட்பாளர்கள் பலர் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து விருந்துகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல்களுக்கு முதலில் எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பொழுதுபோக்கிற்காக தங்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு இவ்வாறு விருந்துகளை ஏற்பாடு செய்யும் வேட்பாளர்களை ஆதரிப்பதை தவிர்க்குமாறு ஹோட்டல் உரிமையாளர்களிடம் அந்த கடிதங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

மேலும் ஹோட்டல்களில் இதுபோன்ற விருந்துகளை நடத்துவதை நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் நேற்று (28) பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

 

இதற்கிடையில், வேட்பாளர்கள் பல்வேறு ஹோட்டல்களில் விருந்து வழங்குவதாக பொய் முறைப்பாடுகள் வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்தொன்றை நடாத்திக்கொண்டிருந்த போது, தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று அந்த இடத்தை சோதனையிட்ட போது, கண்டி மாவட்ட வேட்பாளர் ஒருவர் பின் வாசல் வழியாக தப்பி ஓடியதாக செய்திகள் வெளியாகியிருந்து.

 

இந்த வேட்பாளரின் செயற்பாடுகள் தொடர்பில் கண்டி மாவட்டத்தின் ஏனைய வேட்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...