24 66fa0b12c9db0
இலங்கைசெய்திகள்

வீட்டினை வாடகைக்கு விட்ட பெண் படுகொலை – தம்பதியின் கொடூரமான செயல்

Share

வீட்டினை வாடகைக்கு விட்ட பெண் படுகொலை – தம்பதியின் கொடூரமான செயல்

கம்பஹாவில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தில் வாடகைக்கு வீடு வழங்கும் வீட்டின் உரிமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலையின் பின்னர் 8 லட்சம் ரூபாய் பணமும் 18 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வெலிவேரிய, அம்பறலுவ தெற்கு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய மங்கலிகா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டின் அறையில் தங்கியிருந்த தம்பதியே இந்தக் கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் வீட்டில் இருந்த போது போர்வையால் மூடி மூச்சு விட முடியாதவாறு அழுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றுடன் குறித்த தம்பதியினர் தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

எனினும் குறித்த வீட்டில் மற்றுமொரு வாடகை அறையில் தங்கியிருந்த தம்பதி, கொள்ளையுடன் தொடர்புடைய ஆண் நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தப்பியோடிய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, வாடகைக்கு தங்குமிடங்களை வழங்கும் போது அந்த நபர்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

articles2F4KCbuYEsEEMpFlzcSxAO
உலகம்செய்திகள்

டுபாய் விமான கண்காட்சியில் சோகம்: சாகசத்தில் ஈடுபட்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு!

டுபாயில் நடைபெற்று வந்த விமானக் கண்காட்சியின் இறுதி நாளான இன்று (நவம்பர் 21), இந்திய விமானப்படையின்...