15 9
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இளைஞன்: சாரதி தப்பியோட்டம்

Share

கோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இளைஞன்: சாரதி தப்பியோட்டம்

காரில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி நடு வீதியில் விழுந்த மோட்டார் சைக்கிள் சாரதியை பின்னால் வந்த ஜீப் வண்டியொன்று மற்றுமொரு விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞனின் இரண்டு கால்களும் ஒரு கையும் முறிந்துள்ளதுடன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இரண்டு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்த இளைஞன் இரவு பணியை முடித்துக்கொண்டு கொழும்பில் இருந்து ஹைலெவல் வீதி வழியாக கோட்டாவை நோக்கி வந்து கொண்டிருந்த போது காரில் மோதுண்டு மோட்டார் சைக்கிள் வீதியில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதன்போது பின்னால் வந்த ஜீப் வண்டி மீண்டும் விபத்தினை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும், தற்போது ஜீப்பை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...