ஹிருணிகா பிரேமச்சந்திர சிறையில் அடைப்பு; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!
ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபென்டர் மூலம் கடத்திச் சென்றமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞர்கள் சிலரை கடத்தி தாக்குதல் நடாத்திய குற்ற வழக்கிலேயே இந்த தீர்ப்பு ஹிருணிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.