இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை
இலங்கைசெய்திகள்

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை

Share

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை

இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி கண்டி, கட்டுநாயக்க, மஹரகம தொடக்கம் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய, மத்தள உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பஸ்கள் நடத்துனர் இன்றி பயணிக்கும். அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பமாகும் இடத்தில் பயணச்சீட்டுக்களை வழங்குவதற்காக நடத்துனரின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்படும்.

அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்ததும், நடத்துனர் டிக்கெட்டுகளையும், பணத்தையும், சாரதியிடம் கொடுத்துவிட்டு பஸ்ஸை விட்டு வெளியேறிவிடுவார்.

பயணச்சீட்டு வழங்காது நடத்துனர்கள் மேற்கொள்ளும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டம் முன்னோடி திட்டமாக கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. இது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலமாகவும் சோதனை நடவடிக்கைகள் காரணமாகவும் பஸ்களின் நாளாந்த வருமானம் ஐந்து லட்சத்து 83 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணச்சீட்டு வழங்கப்படுகின்றனவா என்பது குறித்த சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...