இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை
இலங்கைசெய்திகள்

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை

Share

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய நடைமுறை

இலங்கையிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி கண்டி, கட்டுநாயக்க, மஹரகம தொடக்கம் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய, மத்தள உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிவேக வீதிகளில் இயக்கப்படும் பஸ்கள் நடத்துனர் இன்றி பயணிக்கும். அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பமாகும் இடத்தில் பயணச்சீட்டுக்களை வழங்குவதற்காக நடத்துனரின் பங்களிப்பு பெற்றுக் கொள்ளப்படும்.

அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்ததும், நடத்துனர் டிக்கெட்டுகளையும், பணத்தையும், சாரதியிடம் கொடுத்துவிட்டு பஸ்ஸை விட்டு வெளியேறிவிடுவார்.

பயணச்சீட்டு வழங்காது நடத்துனர்கள் மேற்கொள்ளும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டம் முன்னோடி திட்டமாக கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. இது மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலமாகவும் சோதனை நடவடிக்கைகள் காரணமாகவும் பஸ்களின் நாளாந்த வருமானம் ஐந்து லட்சத்து 83 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களில் பயணச்சீட்டு வழங்கப்படுகின்றனவா என்பது குறித்த சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...