24 664e2d1379adf
இலங்கைசெய்திகள்

வட மாகாணத்தில் 100 வருடங்களில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த மழை

Share

வட மாகாணத்தில் 100 வருடங்களில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த மழை

வடக்கு மாகாணத்தின் (northern province) கடந்த 100 ஆண்டு கால காலநிலை வரலாற்றில் அதிகூடிய மழை வீழ்ச்சி மே மாதத்தில் பதிவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜா(Pradeeparaja) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழை வீழ்ச்சி 90 மி.மீ. ஆகும். மே மாத மழை நாட்கள் சராசரியாக 6 ஆகும்.

ஆனால், இந்த ஆண்டு மாதம் முடிவடையாத நிலையில் இடம் சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் திங்கட்கிழமை வரை 230 மி.மீ. மழை கிடைத்துள்ளது.

இந்த மாத இறுதியில் இதனளவு இன்னமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதத்தின் இது வரையான 20 நாட்களில் 12 நாட்கள் மழை கிடைத்துள்ளது.

ஒப்பீட்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு பகுதி, யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பகுதி அதிக அளவிலான மழை வீழ்ச்சியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...