6 35
இலங்கைசெய்திகள்

பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவி நியமனம் தொடர்பில் சிக்கல் நிலை

Share

பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவி நியமனம் தொடர்பில் சிக்கல் நிலை

பரீட்சை திணைக்களத்தின் உயர் பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிப்பது தொடர்பில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் (தொழில்நுட்ப அதிகாரி) பதவி தொடர்பில் இந்த சிக்கல் நிலை எழுந்துள்ளது.

இதுவரை பணிபுரிந்த அதிகாரி ஓய்வு பெற்றதை அடுத்து நியமிக்கப்பட்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரிக்கு அந்த துறை ஊழியர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

எனவே குறித்த அதிகாரி திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவில் கடமையாற்ற வேண்டும் என கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கணினிப் பிரிவிற்கு கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவரை நியமிப்பதன் மூலம் அதன் உள்ளக செயற்பாடுகளை சீர்குலைத்து வெளியீட்டில் மேலும் தாமதம் ஏற்படும் என அரசாங்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிபுணர்கள் சங்கம் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவிற்கு கடிதம் எழுதியுள்ளது.

எனவே இத்துறைக்கு தொழில்நுட்ப சேவை அதிகாரிகளை தவிர ஏனைய அதிகாரிகள் தேவையில்லை என்றும் கணினி துறை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...