tamilnaadi 89 scaled
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நிறுவியுள்ள புதிய அலகு திட்டம்

Share

உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் நிறுவியுள்ள புதிய அலகு திட்டம்

இலங்கையின் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் உயர் செல்வந்தர்களின் வரி இணக்கத்தை உறுதி செய்வதற்காக ‘உயர் சொத்து தனிநபர்கள் அலகு’ (HWIU) ஒன்றை நிறுவியுள்ளது.

குறி்த்த அலகானது, நாட்டின் வரி நிர்வாகத்தில் நேர்மை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அதிக வருமானம் மற்றும் அதிக செல்வம் கொண்ட தனிநபர்கள் மீது கவனம் செலுத்துவதற்கும், அவர்கள் தங்களின் நியாயமான பங்களிப்பை உறுதி செய்வதற்கும், சரியான அளவு வரிகளை செலுத்துவதற்கும் கூடுதல் ஆதாரங்களை இவ்வலகு பெற்றுள்ளது.

மேலும், குறித்த அலகினால் பூர்வாங்க நடவடிக்கையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணிக்கையிலான செல்வந்தர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் மற்றும் அவர்களின் ஆலோசகர்களுடன் இணைந்து அவர்கள் தங்கள் வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்வது உறுதிசெய்யப்படும்.

அதேநேரம், அவர்களின் ஆரம்பத் தாக்கல்களிலுள்ள தவறுகள் அல்லது விடுபடல்களைக் கண்டறிந்து தவிர்க்க உதவுவதைத் தவிர, ஐ.ஆர்.டி அதிக அபாயங்களைக் கொண்ட வழக்குகளில் தணிக்கைகளை நடத்துவதற்கு கூடுதல் இடர் மதிப்பீடுகள் மற்றும் பணக்கார வரி செலுத்துவோர் விவரக்குறிப்புகளையும் நடத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...