tamilnaadi 127 scaled
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் மாற்றம்

Share

அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பு கடமைகளில் மாற்றம்

அதிவேக நெடுஞ்சாலைகளின் உள்ளகப் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் ரக்னா லங்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இந்த கடமையை முன்னெடுத்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அதிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், அதிவேக நெடுஞ்சாலைகளின் பாதுகாப்பிற்காக ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், அதற்காக மாதாந்தம் சுமார் 12 மில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகம மற்றும் குருநாகலுக்கு இடையிலான பகுதியின் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகார சபை கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....