24 66763cc22a167
இலங்கைசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

Share

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பில் மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு மற்றும் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும், கடற்தொழிலாளர்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 692cda477c3f7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு நாயாறு பாலம் மீட்பு: இராணுவ பொறியாளர்களின் துரித நடவடிக்கையால் மீண்டும் போக்குவரத்து சீர்!

‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் முற்றாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு – நாயாறு...

25 6906f59203ad8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது; பெல்லன்வில பூங்காவில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!

தெஹிவளை, குவார்ட்ஸ் (Quartz) விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்...

marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...