tamilni 194 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிக வெப்பம் காரணமாக சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால் கண்பார்வை பாதிக்கப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் கண் சத்திரசிகிச்சை நிபுணருமான மதுவந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் கண்புரையின் நிலையும் அதிகரிக்கலாம் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சில பிரதேசங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இன்று அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகளவில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடினமான வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...