25 684a4607670bb
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறும் நோய் – சுகாதார பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

எதிர்வரும் வாரங்களில் அதிக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்பதால், நாடு முழுவதும் டெங்கு தொற்றின் தீவிர பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரிக்கவில்லை. எனினும் மழை தொடர்ந்தால் இது விரைவாக மாறக்கூடும், ஏனெனில் தேங்கி நிற்கும் நீர் நுளம்புகளுக்கு சிறந்த இனப்பெருக்க இடமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அப்புறப்படுத்தப்பட்ட கொள்கலன்கள் மற்றும் தேங்கி நிற்கும் நீர் நிலைகள் போன்ற நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுவதில் கவனம் செலுத்தி, அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களை தொடர்ந்து ஆய்வு செய்யவும் பொது விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலிகள் அல்லது தோல் வெடிப்புகள் போன்ற அறிகுறிகள் தோன்றினால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...