இலங்கைசெய்திகள்

வடக்கு கிழக்கு கதவடைப்பு போராட்டம்! பொதுமக்களுக்கு அழைப்பு

Share
rtjy 124 scaled
Share

வடக்கு கிழக்கு கதவடைப்பு போராட்டம்! பொதுமக்களுக்கு அழைப்பு

கதவடைப்பு போராட்ட திகதி தொடர்பாக இறுதி முடிவு செய்வதற்கான கலந்துரையாடல் தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் – தந்தை செல்வா அரங்கில், நாளை திங்கட்கிழமை (09.10.2023) மாலை 3 மணிக்கு இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வார்கள், பொது அமைப்புகள் என்பன கலந்து கொண்டு போராட்ட திகதி தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல், மனஅழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும் கண்டித்தும் தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.

இந்நிலையில் நீதிபதி விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு கையளிப்பதற்கான மகஜரில் எவ்வாறான விடயங்களை உள்ளடக்க வேண்டும் என்பதிலும் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஆகவே இதனை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...