அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் மேலும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இலங்கை தனது உத்திகளுக்கான இலக்குகளை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா வரிகளை 20% ஆகக் குறைத்தது குறித்து இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்தப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் பிராந்தியத்தில் உள்ள போட்டியாளர்களுடன் ஒப்பிடக்கூடிய வரி விகிதத்தைப் பெறுவதாகும். பல்வேறு துறைகளில் இலங்கையின் சந்தைப் பங்கைப் பராமரிக்க இது அவசியம்.
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது, வர்த்தகத்துக்கு தடங்கலாக இருக்கும் பெரா-வரி கட்டணங்களை குறைப்பது மற்றும் அமெரிக்க வழங்குநர்களுக்கு போட்டி சந்தை அணுகலை வழங்குவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை செயல்படுத்தும் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, (National Single Window) ‘தேசிய தனியாக பாதையை’ செயல்படுத்துவது உட்பட வர்த்தக வசதிப்படுத்தலுக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.