9 2
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியாக ரணில் அல்லது சஜித்: அரச தரப்பில் இருந்து வந்த செய்தி..

Share

இந்த வருட இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்கள் என்பது ஒரு கட்டுக்கதை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஒகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என சிலர் கூறிவருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டிசம்பரில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தமையையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இது போன்ற விடயங்கள் வேறொரு பிரபஞ்சத்தில் மட்டுமே சாத்தியம் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கருத்துக்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பயனளிக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்த அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எவரும் எங்களை விட திறன் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அதனை மேற்கோள்காட்டிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, வேறொருவர் ஆட்சிப் பீடம் ஏறுவதற்கான ஒரே வழி இது தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை குறித்து மக்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை என்பதையும் அவர் கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 691b58dca001e
செய்திகள்அரசியல்இலங்கை

பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு: அமெரிக்காவில் சிகிச்சையிலுள்ளவர் திரும்புவாரா என்ற சந்தேகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன்...

25 691be54fdfdbd
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க...

Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...