4 5
இலங்கைசெய்திகள்

இலங்கை பிரதமர் அமெரிக்க துணை ஜனாதிபதியை சந்தித்திருக்க வேண்டும்!

Share

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரிகள் குறித்து விவாதிப்பதற்காக அண்மையில், இந்தியாவுக்கு சென்றிருந்த, அமெரிக்க துணை ஜனாதிபதி; ஜே.டி. வான்ஸை சந்திக்க இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய முயன்றிருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் போது துணை ஜனாதிபதி வான்ஸுடன் குறைந்தபட்சம் ஒரு மணி நேர சந்திப்பை மேற்கொள்வதற்காக, பிரதமர் அமரசூரிய, இந்திய அரசாங்கத்தின் தலையீட்டை நாடியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது பேசிய முன்னாள் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் உள்ளூர் நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், எனவே பாதகமான தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை இலங்கை மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவியளிக்க தாம் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மோடி முன்னர் குறிப்பிட்டதை கோடிட்டுக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க, எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் செயற்பாட்டை காட்ட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...