9 15
இலங்கைசெய்திகள்

ஹரின் பெர்னாண்டோவிடம் இருந்து அனுரவுக்கு பறந்த கடிதம்

Share

ஹரின் பெர்னாண்டோவிடம் இருந்து அனுரவுக்கு பறந்த கடிதம்

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தனது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் குறித்த கடிதத்தை தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissnayakke) அனுப்பியுள்ளார்.

ஹரின் பெர்னாண்டோ வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படவில்லை என அனுர விமர்சித்திருந்தார்.

அத்துடன், தான் அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவுகளை வெளியிடவுள்ளதாகவும் அவர் ஜப்பானில் வைத்து கூறியிருந்தார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரிடம் தங்களது வெளிநாட்டு பயண செலவுகளை வெளிப்படுத்துமாறும் அனுர சவால் விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயண செலவுகள் தொடர்பான விபரங்களை கடிதம் மூலம் அனுரவுக்கு அனுப்பியுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்த கடிதத்தில் தம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமைக்காக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அனுரவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...