இலங்கைசெய்திகள்

யுக்திய என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தும் நடவடிக்கை

tamilni 148 scaled
Share

போதைப்பொருளுக்கு எதிராக நாடு முழுவதிலும் பொலிஸார் மேற்கொண்டு வரும்“ யுக்திய” நடவடிக்கைகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சித்திரவதை ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2024 ஜனவரி 3ஆம் திகதியன்று கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் சாரதியை முதலில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள், பின்னர் அதில் பயணித்த ஒரு இளைஞனையும் யுவதியையும் விசாரித்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த இருவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அங்கு இளைஞர் உடல் ரீதியான துன்புறுத்தப்பட்டதாக அவரின் தந்தையான ஜெரால்ட் சேரம் என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலின்படி, தமது மகனின் காற்சட்டையை முதலில் பொலிஸார் கழற்றுமாறு கூறியுள்ளதுடன் அணிந்திருந்த உள்ளாடையையும் கழற்றுமாறு பலவந்தப்படுத்தியுள்ளனர்.

இதன்போது தமது மகனின் காற்சட்டைப் பையில் இருந்த கத்தரிக்கோலில் ஹசீஸ் போதைப்பொருளின் வாசம் வீசியமை தொடர்பிலேயே அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தமது மகன் நகங்களை வெட்டுவதற்காக எப்போதும் தமது காற்சட்டை பையில் கத்தரிக்கோலை வைத்திருப்பது வழக்கம் என்று தந்தையான ஜெரால்ட் கூறியுள்ளார்.

கத்தரிக்கோலில் ஹசீஸ் வாசம் வருவதாக பொலிஸார் கூறினால், ஏன் அதனை இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...