tamilni 314 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருவரின் தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டுக்கள் மாயம்

Share

இலங்கையில் இருவரின் தொலைபேசி மற்றும் கடவுச்சீட்டுக்கள் மாயம்

போதைப்பொருள் கடத்தல்காரர்களான ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு கடவுச்சீட்டுகள் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மடகஸ்கரில் கைது செய்யப்பட்டதன் பின்னர், இருவரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போது, ​​இந்த இரண்டு தொலைபேசிகளும், ஆவணங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இருவரிடம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்த இந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் இரண்டு கடவுச்சீட்டுகளும் எப்போது காணாமல்போனது என்பது தெரியவரவில்லை என கூறப்படுகின்றது.

இந்த தொலைபேசிகளில் முக்கியமான காணொளிகள், பல்வேறு போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் தொலைபேசி எண்கள் போன்றவை இருந்ததாக குற்றப் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...