tamilni 84 scaled
இலங்கைசெய்திகள்

குற்ற விசாரணைப்பிரிவின் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் அதிருப்தி

Share

குற்ற விசாரணைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் குறித்தே அவர் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பில் திருப்திக்கொள்ள முடியாது என அவர் விசாரணை அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹரக் கட்டா தொடர்பான விசாரணைகள் நிலைமையை அறிந்துக்கொள்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று குற்ற விசாரணைப்பிரிவிற்கு திடீரென சென்றுள்ளார்.

விசாரணைகள் மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவதனால் மேலும் மூன்று பொலிஸ் குழுக்களை பதில் பொலிஸ் மா அதிபர் விசாரணைகளுக்காக நியமித்துள்ளார்.

உள்நாட்டில் போதைப்பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த யுக்தி என்னும் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சர்வதேச ரீதியிலான போதைப்பொருள் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹரக் கட்டாவிற்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் ஹரக் கட்டா சுமார் 4000 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதுவரையில் ஹரக் கட்டாவிற்கு எதிராக எந்தவொரு போதைப்பொருள் கடத்தல் வழக்கும் தாக்கல் செய்யப்படாமை ஆச்சரியமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை துரிதப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
licence 1200px 2023 10 18
செய்திகள்இலங்கை

ஓட்டுநர் உரிமக் கட்டணத் திருத்தம் குறித்து இறுதி முடிவு இல்லை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க அவர்கள், சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில்...

image 9f55943f1b 1
செய்திகள்இலங்கை

“மயானத்திலிருந்து மக்கள் சேவையா..!”: சஜித் பிரேமதாசவின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், “மயானத்தில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியாது....

image f4517ddf89 1
செய்திகள்இலங்கை

‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமையில் இருந்தபோது மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ‘யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர்...

sachin tendulkar virat kohli sportstiger 1694859677789 original
விளையாட்டுசெய்திகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி – உலக சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சர்வதேச ஒருநாள் (ODI) மற்றும் ரி20...