13 6
இலங்கைசெய்திகள்

நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்குவதில் ஏன் தாமதம் : நாமல் கேள்வி

Share

தாமதமானாலும் கூட நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தாமதமானாலும் நெல்லுக்கான நிர்ணய விலையை தற்போதைய அரசாங்கம் வழங்கியிருப்பது தொடர்பில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இருப்பினும், இது நியாமான விலை அல்ல காரணம் , அன்று அப்போது 120 ரூபாய்க்கு நெல் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாமதமாகியும் இதே விலை நிர்ணயம் ஏற்றதல்ல.

கடந்த காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலையை விவசாயிகளுக்கு சரியாக வழங்க முடியும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனால், இன்று அந்த விவசாயிகளை மறந்துவிட்டு இன்று அவர்களின் செலவுகளை நெல்லில் சேர்த்து உள்ளீர்கள் பரவாயில்லை.

விவசாயிகளின் 20 மற்றும் 30 வீதம் நெல் விற்பனையான பிறகு நீங்கள் நிர்ணய விலையை வெளியிட காரணம் என்ன ? இதை கேட்டால், நாங்கள் செய்ததை சரி செய்ய காலம் வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

ஆனால் எதிர் கட்சியில் இருக்கும் போது உங்களால் கேள்விக்கேட்க முடிகின்றது இருப்பினும் ஆளும் கட்சியான பிறகு ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை” என அவர் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...