13 6
இலங்கைசெய்திகள்

நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்குவதில் ஏன் தாமதம் : நாமல் கேள்வி

Share

தாமதமானாலும் கூட நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தாமதமானாலும் நெல்லுக்கான நிர்ணய விலையை தற்போதைய அரசாங்கம் வழங்கியிருப்பது தொடர்பில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இருப்பினும், இது நியாமான விலை அல்ல காரணம் , அன்று அப்போது 120 ரூபாய்க்கு நெல் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாமதமாகியும் இதே விலை நிர்ணயம் ஏற்றதல்ல.

கடந்த காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலையை விவசாயிகளுக்கு சரியாக வழங்க முடியும் என தற்போதைய அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஆனால், இன்று அந்த விவசாயிகளை மறந்துவிட்டு இன்று அவர்களின் செலவுகளை நெல்லில் சேர்த்து உள்ளீர்கள் பரவாயில்லை.

விவசாயிகளின் 20 மற்றும் 30 வீதம் நெல் விற்பனையான பிறகு நீங்கள் நிர்ணய விலையை வெளியிட காரணம் என்ன ? இதை கேட்டால், நாங்கள் செய்ததை சரி செய்ய காலம் வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

ஆனால் எதிர் கட்சியில் இருக்கும் போது உங்களால் கேள்விக்கேட்க முடிகின்றது இருப்பினும் ஆளும் கட்சியான பிறகு ஏன் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை” என அவர் கேள்வி எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார். 2025 மே...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...