2 29
இலங்கைசெய்திகள்

தமது பெயரைப் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாக அமைச்சர் முறைப்பாடு

Share

தமது பெயரைப் பயன்படுத்தி மோசடிகள் இடம்பெறுவதாக அமைச்சர் முறைப்பாடு

போலியான சமூக சேவை திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக தம்மைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் ஒரு குழு ஒன்று குறித்து அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் அளித்த அமைச்சர், ஜப்பான், தென் கொரியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள தனது நண்பர்களை வட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட குறித்த குழுவினர், முதலில் சுமார் 16 வினாடிகள் நீடிக்கும் ஒரு தெளிவற்ற காணொளி அழைப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் தமது படம், குரல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்று வேலைகளில் அச்சமின்றி ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடியில் பல வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்ளவேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் ஹந்துனெத்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தாமோ அல்லது அரசாங்கமோ இந்த வழியில் நிதி கோருவதில்லை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக 2025 ஜனவரி 5ஆம் திகதியன்று திட்டமிடப்பட்டுள்ள ஒரு போலி ஸூம் விவாதத்துக்காக தனது கையொப்பம், அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற கடிதத்தலைப்பு மற்றும் முத்திரை என்பன போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த மோசடிகளை செய்பவர்களுக்கு எதிராக முழுமையான விசாரணையை நடத்தி சட்டத்தை நடைமுறைபடுத்துமாறு அமைச்சர் குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், இந்த மோசடி தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது மோசடியில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்கள் தங்கள் அனுபவங்களை வெளியிடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...