ஹமாஸின் காசா தலைவர் முகமது சின்வாரை தமது இராணுவம் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அவர் ஹமாஸின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவரும், அந்தக் குழுவின் மறைந்த தலைவர் யஹ்யா சின்வாரின் சகோதரருமாவார் என நெதன்யாகு கூறியுள்ளார்.
மே 13 அன்று காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையின் முன்னாலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் முன்னெடுக்கப்பட்ட இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் முகமது சின்வார் இலக்குவைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் அங்குள்ள ஹமாஸின் “நிலத்தடி உள்கட்டமைப்பை” அழித்ததாகக் கூறியுள்ளது.
எனினும், சின்வாரின் மரணத்தை ஹமாஸ் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
2023 ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யஹ்யா சின்வார், கடந்த அக்டோபரில் இஸ்ரேலிய துருப்புக்களால் கொல்லப்பட்டார்.
600 நாட்களுக்கு முன்பு ஹமாஸின் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது,
இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அதன் பின்னர் காசாவில் குறைந்தது 54,084 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.