18 17
இலங்கைசெய்திகள்

மீகொடையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர்

Share

மீகொடையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர்

மீகொடை – நாகஹவத்தை பகுதியில் மகிழுந்தில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீகொட – நாகஹவத்த பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன், நேற்றிரவு மூத்த சகோதரர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் மகிழுந்தில் வீடு திரும்பியுள்ளார்.

அதன்போது, வீதியோரம் மறைந்திருந்த இருவர், வாகனத்தை இடைமறித்துத் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு ரீ 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மீகொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...