நாட்டில் இன்று 50ஆவது துப்பாக்கி சூடு

25 14

பாணந்துறையில் இன்று(29.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் நாட்டில் இந்த வருடம் மாத்திரம் 50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாணந்துறை வேகட பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நடந்துள்ளது.

இதன்போது, காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version