tamilni 490 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவு

Share

தேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவுதேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆதரவு

கடந்த ஆண்டு(2023) டிசம்பரில் தேசிய மக்கள் சக்திக்கு ஏனைய கட்சிகளை விட அதிகளவு ஆதரவு காணப்பட்டமை கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டியுட் ஒவ்ஹெல்த் பொலிசி என்ற நிறுவனம் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கம் குறித்து வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பின்படி தேசிய மக்கள் சக்திக்கு 39 வீதமானவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள்சக்திக்கு 27 வீதமானவர்களும், ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் ஐக்கியதேசிய கட்சியிக்கு ஆறுவீத ஆதரவும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கு பத்து வீத ஆதரவும் காணப்படுவதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு மூன்று வீதமானவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு 2022 முதல் அதிகரித்து வருவதை இந்த கருத்துக்கணிப்பு வெளிப்படுத்துகிறது.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியும் தனது ஆதரவை அதிகரித்துள்ளது. ஆனால் மந்தகதியில் இந்த அதிகரிப்பு காணப்படுகின்றது என கருத்துக்கணிப்பினை மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு, 2022 முதல் ஐக்கியமக்கள் சக்தி இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. டிசம்பர் 2023 கருத்துக்கணிப்புகள் ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவு தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதை காண்பிக்கின்றன எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...