இலங்கைசெய்திகள்

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழப்பு

Share
24 6638115c4cda9
Share

பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழப்பு

முச்சக்கர வண்டியில் மோதவிருந்த பேத்தியைக் காப்பாற்ற முயன்ற பாட்டி அதே முச்சக்கர வண்டியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தோட்டை, ரொபோல்கொட பகுதியில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற பேத்தியைப் பாட்டி அழைத்து வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரின் பேத்தி காயமின்றி தப்பியுள்ளதோடு, முச்சக்கர வண்டியைச் செலுத்திச் சென்ற பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...