12,000 பேருக்கு விரைவில் நிரந்தர நியமனம்!
இலங்கைசெய்திகள்

12,000 பேருக்கு விரைவில் நிரந்தர நியமனம்!

Share

12,000 பேருக்கு விரைவில் நிரந்தர நியமனம்!

உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்பர தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளூராட்சி அமைப்புகளில் 12,000 வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் வெற்றிடங்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அனுமதியும் விரைவில் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, மாற்று மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை உடனடியாக நிரந்தர சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அந்த நிறுவனங்களில் இருந்து அந்தந்த பணியாளர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், ஃப்ரீலான்ஸர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களும் உள்ளடங்குவதாகவும், இது தொடர்பான தகவல் சேகரிப்பு நடவடிக்கைகள் முறையான மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுவதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...